மரத்தைத் தாண்டி வருவாயா?



இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு yellow இனிப்பானது EATABLE அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... AND SWEET TOO.. அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்.
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??..ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…
அது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்… அதான் ட்ரூ வாழைப்பழம்… அது எனக்கு கிடைச்சுது! SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,
என்ன கடிக்க வச்சது .இந்தப்பழம்

இதான் நான்
என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம், பழம்தான் சாப்பாடே எனக்கு.. MY AMBITION IS TO BE A BANANA EATER SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம் தொங்கிட்டிருந்த டைம் அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன்.

பழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே
ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல, அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு, ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாரு உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்.. அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..


உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன்.


ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.


BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...


எனக்கான காதல்

உன்னை பார்த்த பிறகும்..
ஒளிந்து கொள்கிறது..
என் மனது உனக்குள்ளும்..
உன் மனது எனக்குள்ளும் !

நீ விட்டுச்சென்ற வாசனைகளில்
மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!

உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்
இன்னும் மின்னுகிறது
முன்னம் உள்ள புன்னகை !

என்னில் காணமல் போன கனவுகள்
தேடிக்கொண்டிருக்கின்றன
உனது நினைவுகளை..!

நீ கேட்காமல் விட்டுசென்ற
என் வார்த்தைகள்
முட்டிமோதிகொள்கின்றன
என் வீட்டு சுவர்களில்...!