
அக்பர் ரிஷுதீன்…. அரபி மொழியில் மிகச் சிறந்தவன் என்று பொருள். பெயருக்கு ஏற்ப வெயிட்டாகப் பிறந்திருக்கிறான் அக்பர்.சுனாமி சுழன்றடித்துத் தாக்கும் இந்தோனேசியாவின் வட சுமத்ரா தீவில் கடந்த 21 ஆம் தேதி, திங்கள்கிழமை அன்று ஆனி என்ற தாய்க்குப் பிறந்த அக்பர் பிறக்கும்போதே 8.7 கிலோ எடை இருந்திருக்கிறான். மற்றக் குழந்தைகளிடையே அவன் உறங்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. இரண்டு அடிநீளமிருக்கும் அக்பர் சிசேரியன் மூலம் பிறப்பிக்கப்பட்டான்.
இந்தோனேசியாவில் இதுவரை பிறந்த குழந்தைகளில் எடை மிகுந்த குழந்தை என்ற சாதனையை அக்பர் புரிந்திருக்கிறான். உலகளவில் எடுத்துக்கொண்டால் 1879 இல், அமெரிக்காவில் பிறந்து உடனே இறந்துவிட்ட ஒரு குழந்தையின் எடை 10.43 கிலோ.அக்பர் அசாதாரண குழந்தை என்பதால் சிசேரியன்கூட கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அம்மா ஆனியின் கர்ப்பப்பையில் இருந்து அக்பரை எடுப்பதற்குள் மூச்சு வாங்கியிருக்கிறது மருத்துவர்களுக்கு. ஆனாலும் பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்துவிட்டான் அக்பர்.பிறந்த சமயத்தில் மூச்சு வாங்க சிரமப்பட்டதால் அக்பருக்கு ஆக்சிஜன் தரப்பட்டிருக்கிறது. மற்றபடி தற்போது அவன் சேமமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அக்பரின் அம்மா ஆனிக்கு 41 வயது. . அக்பர் அவருக்கு நான்காவது குழந்தை. மருத்துவமனையில் பிறக்கும் முதல் குழந்தையும் அக்பர்தான். பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் இருந்திருந்தால் இவனும் வீட்டில்தான் பிறந்திருப்பான்
அக்பர் இருக்கும் எடைக்கு அவன் அருந்தும் பாலும் அதிகமாக இருக்கிறது. அம்மா ஆனி நீரிழிவு நோயாளி வேறு. சர்க்கரை அளவும் உச்சஸ்தாயியில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாயின் மார்பே கதி என்று அவன் கிடப்பதால், அவனுக்குள் க்ளுகோசின் அளவு அதிகரித்து அவன் இன்னும் அதிக குண்டடிக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அக்பர் இருக்கும் எடைக்கு அவன் அருந்தும் பாலும் அதிகமாக இருக்கிறது. அம்மா ஆனி நீரிழிவு நோயாளி வேறு. சர்க்கரை அளவும் உச்சஸ்தாயியில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாயின் மார்பே கதி என்று அவன் கிடப்பதால், அவனுக்குள் க்ளுகோசின் அளவு அதிகரித்து அவன் இன்னும் அதிக குண்டடிக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அம்மா ஆனியின் கைகளில் பரந்து விரிந்து படுத்திருக்கும் அக்பர் அழுதால் சிங்கக்குட்டி உறுமுவதுபோல் இருக்கிறதாம். சாதாரண குழந்தை (ஊரையே எழுப்பிவிடும் அளவுக்கு) கத்தினாலே தாங்க முடியாது. உண்மையில் சிங்கக்குட்டி அளவுக்குப் பிறந்திருக்கும் அக்பர் அழுதால் அப்படித்தான் இருக்கும்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com
www.djhillal.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக