போன் பண்ணா தொல்ல..

ஏன் தெரியுமா 10 வயசுக்குள்ளாற குழந்தைகள் இருக்குற நண்பர்கள் வீட்டுக்கு போன் பண்ணக்கூடாது? அந்த கொடுமைய சொல்றேன் கேளுங்க..
நான் சமீபத்துல, என் நண்பிக்கு போன் செஞ்சியிருந்தேன். அவங்க பிரசவம் முடிஞ்சி கொஞ்சம் பிஸியாகிட்டதால, 1 வருஷத்துக்கு மேல அவங்ககிட்ட பேச முடியலை. திடீர்னு ஞாபகம் வந்த மாதிரி ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க! (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது!). சரின்னு.. நானும் என்னமோ, ஏதோன்னு போனை போட்டங்க... வழக்கம்போல நலம் விசாரிச்சிட்டு, தெரியாத தானமா ஒன்னு கேட்டுடங்க.. என்னான்னா? அந்த டயலாக் டெலிவரிங்களை நீங்களே கீழ படிங்க

நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான்? என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..?
நண்பி : ஆமா.. இப்பெல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டான் யா! என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்..! இரு, அவன்கிட்ட தரேன்!
நானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...
(போன் புடுங்கப்படுகிறது. கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும்..)

நண்பி (தூரத்திலிருந்து): எப்டி மாமா இருக்கீங்கன்னு கேளு!
பையன் : (சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): கேளுடா!
(என் மனசு: "கொய்யால.. கேட்டு தொலடா! இல்லனா.. உடமாட்டா போலருக்கே!")
நண்பி (தூரத்திலிருந்து): கேளு .. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு!
பையன் : ..கா.. கொள.. க..
நானு : (இப்ப நான் சத்தமே போடல)நண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு
நானு : டாய் குட்டி.. சாப்டியாபா? (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..

(இந்த வசனத்தை சொல்லி 5 நிமிஷம் கழிச்சி நண்பி வந்தாங்க லையனுக்கு)நண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..
நானு : இதுமாதிரி பேசிகிட்டு இருந்தா சீக்கிரமா வார்தைகளை கத்துபான்!நண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.
(திரும்ப என்னைய கேக்காமலேயே, அந்த பெரிய மனுஷன்கிட்ட போனை கொடுதுடுச்சு)
பையன் : (சத்தமே போடல)
நண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..நண்பி :
(தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்!!

அப்பாடா நல்வேளை.. இசட் வரைக்கும் போகாம ஒரு வழியா போனை வாங்கி, அவங்க வீட்டுகாரருக்கு வேலை விஷயமா கேக்க ஆரம்பிச்சி, நான் அடுத்த வாரம் இன்ஃபாரம் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்.
ஒரு பத்து நாள் கழித்து, அவளுடைய வீட்டுகாரர் வேலை சம்பந்தமான சர்ட்டிபிகேட் அட்டஷ்டேசன் குறித்து போன் பண்ணலாமுன்னு நினைச்சேன். அய்யோ.. உடனே அந்த நினைப்பை எச்சி தொட்டு அழிச்சிட்டு, chat பண்ணா தப்பிசி்டலாமுன்னு அறிவா(?) கணக்கு போட்டு, சாட்ங்குல அவளை பிடித்தேன்.

நானு : ஹாய்
நண்பி : Hang on, my son is all over the லேப்டாப்
நானு : ஓகே
நண்பி : He wants to say something to யு
நண்பி : .z..,zxcnv..a.,க்ஸ்

எனது நண்பனின் உண்மை சம்பவம் .........
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?

மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.
ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.
அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு

1.மார்பகங்கள் தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது

2.பிட்யூட்டரி சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.

பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.
ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.
ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.

1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது.

மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.
குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.
எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.
எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஆதலினால் காதல் செய்வீர் !

ஒரு ஆசிரியர் , மாணவர்களிடம் " கோபம் வந்தால் நாம் ஏன் சத்தமாக பேசுகிறோம் ? மக்கள் ஆத்திரத்தில் ஆவேசமாக உரத்த குரலில் பேசி சண்டை இட்டு கொள்வதேன் ? ,என்று கேட்டார்.

ஒரு மாணவன் எழுந்து , " கோபம் வரும் போது, நாம் அமைதியை இழந்து விடுகிறோம்,அதனால் கத்துகிறோம் " என்றான் ." சரி, ஆனால் நம்மை கோபப் படுத்திய நபர் ,மிக அருகில் இருக்கும் போது , உரத்த குரலில் ,தடித்த வார்த்தைகளில் பேசுவதின் காரணமென்ன ? நாம் சொல்ல நினைப்பதை மெதுவான குரலில் ஏன் சொல்ல முற்படுவதில்லை ? " -

ஆசிரியர் .மாணவர்கள் பல பதில்கள் சொன்னாலும் , அவை சரியான காரணத்தை விளக்காததால் , ஆசிரியர் தொடர்ந்தார்., " இரு மனிதர்கள் கோபப் படும் போது , அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக அதிகரித்து விடுகிறது, அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காகவே , இருவரும் உரத்த குரலில் பேசுகின்றனர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் உள்ளதோ , அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது.,அன்பு வயப்பட்ட இருவர் ( நண்பர்கள் /காதலர்கள் ) பேசும் போதுசத்தம் போட்டு பேச அவசியம் இருக்காது ,ஏனெனில் அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக குறைந்து விடுகிறது.மனமொத்த காதலர்கள் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை , ஒருவர் முனுமுணுத்தாலே, மற்றவர் புரிந்து கொள்வார். ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது .இறுதியாக இதய பரிமாற்றம் செய்து கொண்ட காதலர்களுக்கு ,வார்த்தை பரிமாற்றமே தேவை படுவதில்லை .கண்களின் மூலமே பேசி கொள்கின்றனர்.

டிஸ்கி : விவாதங்களின் போது இதயங்களை தூரப் போகும் படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் ., மற்ற இதயங்களுக்கு செல்லும் பாதை ஒருவழிபாதை., ஒரு முறை தூரமாக சென்று விட்டால் ,மறுமுறை அருகில் வருவது கடினம்.,

எங்கேயோ படித்த கவிதை :
என் மௌனமே உனக்குபுரியா விட்டால் ,வார்த்தைகளால்
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

காதலிக்கு காதலனிடம் பிடித்த 10!


1) "ஐ மிஸ் யூ டா" என்று ரொம்ப ரியலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் போது, "இப்ப எப்படி வர்றது.. ப்ளீஸ்மா.. புரிஞ்சிக்கோ" என்று இழுத்துக் கொண்டு போய், எதிர்பாராதவிதமாக திடீரென்று "கீழே தான் இருக்கேன், வா" என ஷாக் கொடுப்பது, அந்த ஆச்சர்ய பரவச மின்னல்களை கண்ணில் காணலாம். ஆளே இல்லாத தெரு என்றால் லைட்டாக வந்து மார்பில் சாய்வாள். இல்லையென்றால் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டு கண்களால் சிரிப்பாள். (அடிக்கடி பண்ணினால், உஷார். வேலை வெட்டி இல்லாதவன் என்று நினைக்கக் கூடும்).


2) வொயிட் க‌ர்ச்சீப் ரொம்ப க்ளீனாக‌‌ இருந்து கொண்டு, எப்ப‌வாவ‌து எடுத்து வேர்வையை ஒற்றித் துடைக்கும்போது ஓர‌க்க‌ண்ணால் ர‌சிப்பாள். (துப்பட்டா ஓரத்தில் கை வைத்தால், க‌ன்ன‌ம் சிவ‌க்கும்.)



3) அவ‌ளுக்கு பிடித்த‌ பெர்ஃப்யூம் ரொம்ப‌ மைல்டாக‌ யூஸ் ப‌ண்ண‌லாம். (பொதுவாக‌ காத‌ல‌னின் விய‌ர்வை ம‌ண‌ம் பிடிக்காத‌ பெண்க‌ள் அரிது. அழுக்கு ட்ரெஸ்ஸின் க‌ப்போடு வ‌ருப‌வ‌னை கேவ‌ல‌மாக‌ திட்டும் அபாய‌ம் உண்டு. நாள் முழுவ‌து ஷாப்பிங் என‌ அங்கு இங்கு அலைந்து திரிந்து வ‌ரும்போது, பைக்கின் பின்னால் உட்கார்ந்துகொண்டு எதேச்சையாக நுகர்வது போல் நுகர்ந்து ர‌சிப்பாள், அது க‌விதை)


4) ப‌ர்த்டேவில் வ‌ழ‌க்க‌ம்போல் ட்ரெஸ், க்ரிஸ்ட‌ல் வொர்க்ஸ், டெடிபிய‌ர் என‌ ஜ‌ல்லிய‌டிக்காம‌ல், இன்னோவேட்டிவாக ஏதாவது ப‌ண்ணினால் மிக‌வும் ர‌சிப்பாள். இந்த‌ கால‌த்தில் ல‌வ் லெட்ட‌ர் கொடுக்கும் க‌ல்ச்ச‌ர் எல்லாம் இம‌ய‌ம‌லை ஏறிவிட்ட‌து. இப்போது அதை ரெண்டு மூன்று ப‌க்க‌த்திற்கு எழுதி கொடுக்க‌லாம். கவிதை எழுதிக் கொடுக்கலாம். அவ‌ள் ச‌ண்டை போட்ட‌ காலேஜ் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரையாவ‌து முன்னால் நிறுத்தி ஷாக் கொடுக்க‌லாம். டிப்ஸ் வேண்டும் என்றால் த‌னியாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும்.


5)ச‌க‌ட்டுமேனிக்கு சைட் அடிக்காம‌ல் ம‌ற்றும் திற‌ந்த‌ மேனியுட‌ன் வ‌ரும் ஜிகிடிக‌ளை நாக்கை தொங்க‌போட்டு பார்க்காம‌ல் ஜென்டிலாக‌ இருக்கும்போது, ரொம்ப‌ பெருமையாக‌ உண‌ர்வாள். அழ‌கான‌ ட்ரெஸ்ஸோடு ஹோம்லியாக‌ வ‌ரும் ஃபிக‌ரைக் காட்டி, "இந்த‌ ட்ரெஸ் ந‌ல்லா இருக்குல்ல‌.. நெக்ஸ்ட் டைம் ஷாப்பிங் போகும்போது வாங்க‌லாம்" என்று சொன்னால் மட்டும் போதும், ச‌ண்டையே போட‌ மாட்டாள்.


6) கோவிலில் அவ‌ள் சீரியஸாக‌ சாமிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்க‌ள் அவ‌ளையே ர‌சித்து பார்த்துக் கொண்டிருக்க‌ வேண்டும். அவ‌ள் சாமி கும்பிட்டு க‌ண்ணை திற‌க்கும்போது, நீங்க‌ள் ப‌ட‌ப‌ட‌ப்புட‌ன் க‌ண்க‌ளை மூடி பாவ்லா ப‌ண்ணினால், ர‌சிப்பாள்.


7) பேச‌ எதுமே இல்லாம‌ல் இருக்கும்போது, ரெண்டும் பேரும் "அப்புற‌ம், அப்புற‌ம்" என்று சொல்லி போர‌டிக்காம‌ல் "அப்புற‌ம் உங்க‌ ஆஃபிஸ்ல‌ அந்த‌ சொட்டைத் த‌லைய‌னுக்கு என்ன‌ ஆச்சி?" என்று உற்சாக‌த்துட‌ன் தொட‌ர்ந்தால் அவ‌ளுக்கும் உற்சாக‌ம் தொற்றிக் கொள்ளும். (புறம் பேசுவதை விரும்பாத‌ பெண்கள் எவ‌ர்?)


8)எவ‌னுட‌னாவ‌து வெட்டியாக பேசிக் கொண்டிருப்ப‌தை, ரொம்ப‌ மெல்லிய‌ குர‌லில் அத‌ட்டினால் அந்த‌ பொஸ‌ஸிவ்னெஸ் ரொம்ப‌ ர‌சிப்பாள். (எல்லை, வாய்ஸ் மாடுலேஷன் எல்லாம் ரொம்ப‌ ரொம்ப‌ முக்கியம், பாஸ். இல்லைன்னா கிளி பறந்து போயிடும்)


9)ஈ.சி.ஆர் ரில் ஆள் க‌ம்மியாக‌ இருக்கும் பீச்சில் வ‌ண்டியை நிறுத்தி, அவன் bare body யுட‌ன் குளிப்ப‌தை (த‌னுஷ் ரேஞ்சில் மார்பு, அஜித் ரேஞ்சில் தொப்பை இருந்தாலும்) வைத்த‌ க‌ண் வாங்காம‌ல் ர‌சிப்பாள், அவ‌ள் க‌ரையில் இருந்து கொண்டு.


10)Most important point, காத‌லிக்கு காத‌லினிட‌ம் மிக‌வும் பிடித்த‌து எது? மீசை! ந‌றுக்கென்று ஷார்ப்பாக அடிக்கடி ட்ரிம் பண்ணிக்கொண்டு இருப்ப‌வ‌னிட‌ம் இருக்கும் மேன்லினெஸ்ஸை எப்ப‌வும் ர‌சிப்பாள். (இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுப‌டும்.)

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்!!

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!
நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.
ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!
நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!
சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?
பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!
1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே? நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)
2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!
3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)
4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!
5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!! சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!
6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)
7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!
8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)
9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!
10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!
என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

தலையணை மந்திரங்கள்-16 !!

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது



இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இறுக்கும்



1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்



2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்



3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)


4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.


5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!


6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.



7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.


8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.


9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.


10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.


11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?



12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.


13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.


14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.


15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.


16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!





NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்!

காதல் கஸ்டமர்(கஷ்டமர்?)களுக்கு இந்தப் பதிவு.
நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு! அதில் சாதிப்பது எப்படி? அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்

1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக்

2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!

3.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்

5.அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்

6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

7.தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவறும்

8.கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

9.கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!

11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!

12.அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!

13.அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..

15.அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

16.இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

முதலிரவில் முதல் கொலை

முதலிரவு அறை. அடர்த்தியாக குளிர் பரவியிருந்தது. பூக்கள் கிறக்கமூட்டின. ஒரு ராட்சத மெத்தை முதல் காட்சிக்கு தயாராய் இருந்தது. அந்த அறை மேல் நாட்டு தொழில் நுட்பத்தில் உள்ளே குண்டு வெடித்தாலும் வெளியில் கேட்காத அளவுக்கு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது

ஆனந்த் ஆவலோடு காத்திருந்தான். தன் புது மனைவியை எதிர்பார்த்து. அவன் கற்பனை வான் அளவுக்கு உயர்ந்திருந்தது. அவள் வர தாமதித்தாள். அவனுக்கு எதிர்பார்த்து காத்திருப்பது வெறுப்பாக இருந்தது. அவன் ஆசை சுரப்பிகள் அவள் அழகு மழைக்காக காய்ந்திருந்தன

உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாக புறப்பட்டாள். ஒரு அசையும் பொம்மைபோல. தலை குனிந்து. அவள் சேலை கூட வெட்கப்பட்டது. கையில் ஒரு கண்ணாடி டம்பள்ரில் பால் வைத்திருந்தாள். முதல் முறை அந்த அறைக்குள் எதற்கு போனோம் என்பதை நினைத்தபோது உடல் குலுங்கியது. சுதாரித்துக்கொண்டாள். சாற்றியிருந்த கதவை மெல்ல விலக்கினாள். உள்ளே தரையில் ஆனந்த் படுத்திருந்தான். பிணமாய். அவன் தலையிலிருந்து ரெத்தம் வழிந்து அவன் தலைக்கு மேல் ஒரு அடிக்கு தரையில் படர்ந்திருந்தது

அவன் கையில் ஒரு துப்பாக்கி திணிக்கப்பட்டிருந்தது. சுவற்றில் புள்ளட் ஒன்று சீறி பாய்ந்த தடம் தெரிந்தது.

ஓவென்று காது பொத்தி கதறினாள். அவள் கொண்டு வந்த பால் டம்ப்ளர் அந்த அறை வாசலில் விழுந்து நொறுங்கியது. பால் வழிந்து ரெத்ததோடு கலந்து சைவ பால் அசைவமாகிக் கொண்டிருந்தது.அவள் அலறியது அந்த வீடு முழுவது எதிரொலித்தது. அந்த பங்க்ளாவின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து ஓடி வந்தனர். அவள் ஓங்கி அழுதவாறு சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். ஒவ்வொருவராய் வெளியிலிருந்து உள்ளே எட்டி பார்த்தனர். எவரும் உள்ளே பிரவேசிக்கவில்லை. அவனது அம்மா உள்ளே போக முற்பட்டாள். அவளை சிலர் சமாதானப்படுத்தி இழுத்துக்கொண்டு போனார்கள். சிலிர் உள்ளே பார்க்க பயந்து என்ன என்ன என்று விசாரித்து கிசு கிசுத்தனர்

ஒருவர் போலீசுக்கு தகவல் சொன்னார். அந்த தெருவையே எழுப்பியது அந்த போலீஸ் சைரன். எல்லோரும் புது மாப்பிள்ளை முதலிரவு அறையில் தற்கொலை செய்து கொண்டதை ஆச்சரியம் கலந்த பயத்தோடு பேசிக்கொண்டார்கள். போலீஸ் வந்து வித விதமாய் புகை படமெடுத்தார்கள். படம் வரைந்தார்கள். அவனுடைய அப்பாவோடு தனியாக ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒரே ஒரு புல்லட் அந்த கல்யாண வீட்டை சாவு வீடாக மாற்றியிருந்தது. யாரும் வாய் விட்டு அழவில்லை. அழுவதை ஏதோ ஈகோ தடுத்தது. நந்தினி மட்டும் ஓயாமல் அழுதுகொண்டிருந்தாள். போலீஸ் அவளையும் விசாரித்தது. "நான் பால் டம்பள்ரோடு உள்ளே வந்து பார்த்து அவர்……" என்று வாய் பொத்தி மறுபடியும் அழுதாள்.

போலீஸ் வெவ்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியது. அதை தற்கொலை என ஆழமாய் நம்பியது.
"கன்பார்ம் சூசைடு தான். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
" இல்லை "என்றார் ஆனந்தின் அப்பா
"சார் போஸ்மார்டன் முடிந்து நாளைக்கு காலையில பாடிய எடுத்துறலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர். அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு தொழிலதிபர் மகன் ஆனந்த் முதலிரவு அறையில் தற்கொலை என சூடாக செய்தி போய் சேர்ந்திருந்தது. அது தற்கொலை என எல்லோரும் நம்பியதில் நந்தினி உள்ளுக்குள் ஆர்பரித்தாள்

"எத்தனை அட்டூழியம். எல்லாம் பணம் இருக்கும் திமிர் தானே. இவனை கொன்றதில் என்ன தவறு .என்னை ரமேஷ் உயிருக்கு உயிராய் காதலித்தான். ஒரு நாள் இதோ மூளை சிதறி இறந்து கிடக்கிறானே இந்த பணக்கார நாய் தன் காரில் வந்து என் மீது மோதினான். மோதிய மாத்திரத்தில் என் மீது மோகம் வந்ததாம். எத்தனை அதிகாரம் செய்தான். என் வீட்டில் இருப்பவர்களை மிரட்டி...என் காதலனின் வீட்டாரை ஊரை விட்டே விரட்டி...பயந்தோடச்செய்து....என் அப்பாவை பணத்தால் மயக்கி ஒரு கூண்டுக்கிளியாய் முகூர்த்த நேரம் பார்த்து சிறை பிடித்தானே....இதோ அவன் ஆணவம் ரெத்தமாய் உருகி வெளியேறிக்கொண்டிருக்கிறது

"இதோ நான் போகப்போகிறேன். ரமேஷ் எனக்காக ஏதாவது ஒரு ஊரில் காத்திருப்பான். தாடி வளர்த்திருப்பான். சரியாக சாப்பிடாமல் இருப்பான். குடிக்க தொடங்கியிருப்பானோ? அவனை காப்பாற்ற வேண்டும். அவனிடம் உரக்க சொல்ல வேண்டும் உன்னை என்னிடமிருந்து பிரித்தவன் மடிந்துவிட்டான். உன் தெய்வீக காதலை அணு அணுவாய் கொன்றவன் அழிந்துவிட்டானென்று. என்னை சிறை பிடித்தவன் கை விரல் கூட உனக்காக வளர்த்த இந்த தேகத்தை தீண்டியிருக்கவில்லை. அந்த மிருகத்திடமிருந்து என்னை நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன் உனக்காக. ரமேஷை தேடி கண்டுபிடிப்பேன். உலகில் ஏதோ ஒரு மூலையில் எனக்காக உருகி உருகி இந்த இரவில் அழுது கொண்டிருப்பானே அவனை தேடிப்போக வேண்டும். அவன் என்னை ஏற்றுக்கொள்வான். இவனை கொன்றுவிட்டதாக சொன்னால் என்னை தூக்கி கொண்டாடுவான். அவன் முதல் முதலில் பரிசாய் கொடுத்த மோதிரம் கை விரல்களில் அவன் நினைவுகள் போல் இறுகியிருந்தது."

அடுத்த நாள் அவளின் ஒரு நாள் கணவனின் உடலை ஆம்புலன்சில் கொண்டு வந்தார்கள். நடு ஹாளில் அந்த கண்ணாடி பெட்டியில் அவன் உடல் வெள்ளை துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. நந்தினி மெல்ல வந்து அதன் அருகில் அமர்ந்தாள். உள்ளுக்குள் பழி தீர்த்த சந்தோஷம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென்பதற்காய் அழுதாள். எல்லோரும் இவளை பரிதாபமாய் பார்த்தார்கள். அவளது மனம் ரமேஷை தேடி எப்போது எப்படி எங்கே போவதென்பதையே சிந்தித்துக்கொண்டிருந்தது . ஒவ்வொருவராய் வந்து மலர் வளையம் வைத்தார்கள். தலை குனிந்து அழுதாள். அழுவதாய் நடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட வரிசையில் ஆட்கள் மாலையோடு காத்திருந்தார்கள்.


திடீரென கூட்டம் விலகி யாருக்கோ வழிவிட்டது. நந்தினி தலை உயர்த்தி பார்த்தாள். ரமேஷ். அவன் கையில் ஒரு மலர் வளையம் வைத்திருந்தான். அவன் பின்னால் ஒட்டியபடி ஒரு பெண் வந்தாள். அவள் கழுத்தில் தாலி இருந்தது . அவன் மௌனமாய் வந்து கண்ணாடி பெட்டியின் மீது மலர் வளையம் வைத்தான். அவன் பின்னால் வந்த பெண் "அண்ணா என்ன விட்டு போயிட்டியே" என அந்த கண்ணாடி பெட்டியில் இடித்து அழுதாள். ரமேஷ் நந்தினியை ஒரு முறை பார்த்தான். அந்த பார்வை "உன்னை விட்டுக்கொடுத்து தான் இவன் பணக்கார தங்கையை வாங்கினேன்" என்றது. அவளது கணவன் தான் இறந்ததற்கான காரணம் தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தான்

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

டிப்ஸ் பெண்களுக்காணவை

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள்.அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.




தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை


படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.


பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.



அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.



அவள் கூறியதாவது:



ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார். அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன். எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது



ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.



ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்



தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே! என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.



திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்



எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்



கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.



எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

முதலிரவு அவ்வ்வ்வ்வவ்......!!!!!!

காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் socity திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.
திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.

முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும்.

நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்

ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது.
திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.

மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது. காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)
என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்.

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

இது `கேர்ள் பிரண்ட்’வைத்திருப்பவர்களுக்கு மட்டும்!

அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு!

இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், `மற்றவர்களை கவர்வதற்கான அவயங்கள் இல்லை என்று அர்த்தம்’ என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்! உங்கள் கேர்ள் பிரண்டிடம் உடல் அழகு எப்படி? நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள்? அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா? என்பதை இப்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம். பெண்களின் அழகு என்று வர்ணிக்கப்படும் அவயங்கள் பற்றி, உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் உங்களது கண்ணோட்டம் எப்படி என்பதை அறிய சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விக்கான பதிலை `டிக்’ செய்துவிட்டு, இறுதியாக உங்களுடைய கேர்ள் பிரண்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்…
அ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம்.
ஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட கூந்தல்.

2. கண்கள்:
அ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்…
ஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள்.

3. கன்னம்:
அ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது…
ஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும்.

4. பற்கள்:
அ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர்.
ஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது.

5. முழங்கை:
அ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.
ஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை.

6. மார்புகள்:
அ. கனகச்சிதமாக இருக்கும்.
ஆ. சரிந்து காணப்படும்.

7. வயிறு:
அ. உறுதியாக… அழகாக.. இருக்கும்.
ஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது.

8. இடுப்பு:
அ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும்.
ஆ. பார்க்கவே சகிக்காது.

9. கால்கள்:
அ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும்.
ஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும்.
10. பாதம்:
அ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும்.
ஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது.


`டிக்’ அடித்துவிட்டீர்களா?.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்… `அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள்

9-10 மதிப்பெண் என்றால்… நீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெண் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்!

5-8 மதிப்பெண் என்றால்… உங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம்.

0-4 மதிப்பெண் என்றால்… உங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை




NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!

பாலுணர்வு அல்லது செக்ஸ் உணர்ச்சி என்பது மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல மானுட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சியாகும்.
உணவுப் பசி, தண்ணீருக்காக ஏற்படும் தாகம், உழைப்பினால் ஏற்படும் களைப்பு, அதன் காரணமாக தேவைப்படும் ஓய்வும், உறக்கமும் போன்று, யதார்த்தமாக ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சியே பாலுணர்ச்சியும் ஆகும். ஆனால், மற்ற இயற்கை உணர்ச்சிகள் எல்லாவற்றையும் விட, இந்த உணர்ச்சிக்கு - நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய அளவில - அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று கூறுவதற்கு பெரும் சிந்தனை தேவையில்லை. பசி உள்ளிட்ட மற்ற அனைத்தும் அதன் நுகர்ச்சிக்குப் பின் சக்தியாகி, பின் கழிவாகின்றன. ஆனால், காமத்தின் நுகர்ச்சிக்குப் பின்தான் சந்ததி உருவாகிறது. குடும்பம் உருவாகிறது

அனைத்திற்கும் வேராய் இருப்பது இந்த உணர்ச்சி. இதில் பெறும் இன்பம் வேறெதிலும் மானிடம் (ஆன்மீகத்தை தவிர்த்து விட்டுப் பார்ப்போம்) பெறுவதில்லை. அதனால்தான் மானுட வாழ்வில் இதற்கு ஒரு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது.
அரசர் வரலாறும் அந்தப்புர வரலாறும்!
மானுட வரலாற்றில் ஆட்சிக்கும் அந்தப்புரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.
குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆண்ட காலத்தையும், பல்வேறு நாட்டு அரசர்கள், அண்டை நாட்டு அரசர்களை வெற்றிபெற்று தங்கள் எல்லைப்பரப்பை விரிவாக்கிக் கொண்டதையும் வரலாறு மூலம் அறிகிறோம்.
மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது.
அதாவது, மன்னருக்கு ராணியைத் தவிர வேறு பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறாரோ, அப்போது அந்தப்புரத்தில் வாழும் அல்லது பரம்பரையாக வசிக்கும் பெண்களுடன் சரச விளையாட்டில் ஈடுபடுவார். அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள்.
நாள் கணக்கில், வாரக்கணக்கில் - ஏன் மாதக்கணக்கில் கூட அந்தப்புர பெண்களின் அழகில் மயங்கிக் கிடந்து ஆட்சியை இழந்த மன்னர்களும் உண்டு

இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அவ்வப்போது வேறு பெண்களையும் நாடிச் சென்றுள்ளான் என்பது தெரிய வருகிறது.
இதில் மன்னன், சாதாரண மனிதன், ஆண், பெண் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவருமே அடக்கம்.
நாளடைவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி வந்த பின் பரத்தையர்கள் அல்லது விலைமாதர்கள் (தாசிகள் என்ற பெயரும் உண்டு) என்ற குறிப்பிட்ட பிரிவினர், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊரின் நாட்டாமை அல்லது பண்ணையார், ஜமீன் என அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களின் தயவில் அவர்கள் தங்கள் ‘பிழப்பை’ நடத்தி வந்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கோயில் திருவிழாக்கள், ஊரில் முக்கிய நிகழ்ச்சிகள், ஜமீன்தார் வீடுகளில் நடக்கும் நன்நிகழ்ச்சிகளுக்கு பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருப்பதையும் அறிகிறோம்

கோயில்களில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாடம் நடைபெறும் திருப்பணி பூஜைகள், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பிரிவினர் நாட்டியம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளனர்.
விழாவிற்கு கூடும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை, ஊர்ப் பெரியவர்கள் தரும் சன்மானங்களைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.
இந்த பிரிவினர் குறிப்பிட்ட எந்த ஒருவரையும் திருமணம் முடித்துக் கொள்ளாமல், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளை மட்டும் வளர்த்து தங்கள் வழியில் கலைகளைக் கற்றுக் கொடுத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளதையும் காண்கிறோம். ஆண் குழந்தைகள் பிறந்தால், உடனே அந்தக் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.


NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்


ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..


1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.


2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?


3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?


4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?


5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?


6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?


7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?


8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?


9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?


10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.


11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?


நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.


NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

பெண் ஒரு புத்தகம்தான்


நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர்ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன.ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம்தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு.பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறியிருந்தனர்.பெண்களை நம்பலாம் என கூறியிருந்தவர்கள் 54 சதவீதம் பேர்.ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில்லையாம்.ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மேட்டிவ் ஆனவை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடிகிறது என்று முடிக்கிறது அந்த ஆய்வு.எல்லாம் சரி, நாளைக்கு காலையில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது 'லைட்'டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடிப்பாரா என்பதை கணி்க்க முடியுமான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்..


NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஹிலால்..........

WELCOMES TO HILLAL'S PERSONAL SITE

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

பெண்கள் ஆண்களிடம் விரும்பாதவை!!


பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும்!!!
அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக்க வேண்டும்! அவர்கள் விரும்பாத மாதிரிதான் நம் நடவடிக்கைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம்.
பெண்கள் ஆண்களிடம் விரும்பாதவை என்ன என்று தெரிந்துகொண்டால் அவர்கள் விரும்புவது என்ன என்று எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். எப்படி!! சுருக்கு வழியாக இருக்கிறது அல்லவா? பார்ப்போமே..
1. நேரத்தை எப்படி சரியாக கணக்கிட்டு அந்த நேர வேலைகளை சரியாக முடிக்கவேண்டும்!! அப்படியில்லாமல் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை எப்போதும் காக்க வைக்கிறீர்களா? நிச்சயம் இது சந்தோசத்தைத் தராது..அதன் பின் கேள்விகளும்.. விளக்கங்களும் ...சண்டைகளும்.. சரியா வராது. நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. இதுக்குப் பிறகு நாம என்னத்தை சந்தோசமாக இருப்பது?
இதே பிரச்சினை அலுவலகத்தில்,நண்பர்களிடம் என்று பரவினால் எந்த இடத்திலும் நல்லபடியா சந்தோசமா இருக்கமுடியாது. மொத்த விசயங்களும் கொலாப்ஸ் ஆகி விடும்.
2.சும்மா சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுபவரா.. ஒரு வேலையைச் செய்யாமல் ”மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சின்னச்சின்ன விசயங்களில் ஆரம்பிக்கும் மறதி மிகப்பெரிய பிரச்சினைகளில் உங்களை மாட்டிவைக்கும். சிலபேர் அவர்கள் வேலைகளை மறக்காமல் செய்துவிட்டு மனைவியுடன் சினிமா செல்ல வேண்டியதையோ அல்லது மனைவி சம்பந்தமான முக்கிய விசயங்களையோ மறந்துவிடுவார்கள். இது அவர்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையின்மை, அலட்சியப்போக்கு என்றே கருதப்படும்!!
உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!
3.சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கவேண்டும். காதலியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த பொழுதை மிகுந்த சந்தோசத்துடன் கழிக்கவேண்டும்! பிரச்சினைகள் எல்லோருக்கும் உள்ளதுதான். இது பெண்களுக்கும் தெரியும். ஆனாலும் சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவும் முன்னேற்பாடுடன் ஜோக்குகள், விளையாட்டுக்கள் என்று அசத்தினீர்களென்றால் அவ்வளவுதான். ஆள் ஃபிளாட் ஆகிவிடுவார்கள்!!
4.உடை அணிவது முடிஅலங்காரம் ஆகியவற்றில் நாம் அக்கறையுடன்இருக்கவேண்டும். காதலியின் தாத்தாவின் பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் அவருக்கு ஒரு பரிசு வாங்கிச்செல்வது, (முடிந்தால் உங்க ஆளுக்கும் ஒன்று.. சும்மா ஒரு சாக்குத்தானே...) நல்ல உடை அணிந்து செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். தாத்தாதானே என்று ஏனோதானோ என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. அது அங்குள்ளோர்களுக்கு முக்கியமாக உங்கள் காதலிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்!! நீங்கள் உங்கள் காதலியால் பெரிதும் ரசிக்கப்படும் முக்கிய நபர் என்பதை மறக்கவேண்டாம்.
5.விசயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. நீங்கள் நிறைய விசயங்களை மறைத்துவைத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நம் சொந்தக்காரர்கள்( கோள் சொல்வதற்கென்றே இதில் சிலர் இருப்பர்) , நண்பர்கள் மூலம் தெரியும்போது நீங்கள் எந்தச்சமாதானமும் சொல்ல முடியாது. முழுப்பொய்யராகக் காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவீர்கள்!! அப்புறம் நாம் சொல்லும் சமாதானங்கள் எடுபடுமா என்ன!!” நீங்கள் அவ்வளவு பெரிய விசயத்தையே மறத்தவர்... உங்களை எப்படி நம்புவது?” என்றுதான் கேட்பார்கள்.
6.மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோ, பின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் காதலி/மனைவி அதைத் தவறாக( மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்... அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!..ஹி.. ஹி...ஹி..இதை உடனே சொல்ல மாட்டர்கள். கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ருசுவானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். ”ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க.. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!!
பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால் சங்குதான்.........

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

இந்தச் சிலை' - RAZ???????????


'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?'. அதில் ‘எதைக் கேட்டாலும் வெட்கத்தைத் தருகிறாயே?

'என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?' என்றா கேட்கிறாய். நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய்உன்னைப் பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்!

உனக்கு வாங்கி வந்தநகையைப் பார்த்து'அய்......எனக்கா இந்த நகை' என்று கத்தினாய். நகையோ, 'அய்......எனக்கா இந்தச் சிலை'என்று கத்தியது.